ஆழ்கடலில் கிடக்கும் கல்லையும் கண்டறிய கண்டோம்!
நிலவிலிருந்து மண்ணும் எடுக்க கண்டோம்!
மறைந்த மாபெரும் உருவம் எங்கே!
தேடி அதனை கண்டறிய காணோம்!
மறந்த நிலையில் மனிதர்களானோம்!
தலைப்புச் செய்தியாய் தவித்ததெங்கே?
தரணியெங்கும் படித்த தாளாய் வீசிஎரிந்ததெங்கே?
மாந்தர்கள் மலைப்பு கொண்டு மறந்தும் போயினர்!
மாண்டது அதிலே மனிதர்கள் தானே!
மறந்து விடாதே அவனும் உன் சகோதரனே!


No comments:
Post a Comment