கனவுகளை நோக்கி நடந்த நாட்களில்,
கல்லறைக்கு ஈர்த்த வழிகளே அதிகம்,
காத்திருந்தால் காலக்கரையான்கள் கால்களை அரித்து விடும்,
கல்லையும் கரைக்கும் காரணகாற்றுகள் இங்கு அதிகம்,
பொருத்தார் பூமியை ஆளலாம் என்றிருக்கலாம்,
ஆனால் இங்கோ பொருத்தார் வாழ முடியாது
இருப்பினும் உருகினேன் மனம், இறுக்கமான சமுதாயமென்று.
என்றும் முன்நோக்கிய என் கால்கள்,
ஒருபோதும் மூட துடிக்காத என் இமைகள்,
எங்கே என தேடித்திரிந்த போது தெரிந்துகொண்டேன்,
என் நிலை என்னை விரட்டியதால்
நான் நிற்கிறேன் இங்கு வேதனையுடன் என்று..
கடவுளே உன்னை நான் என்ன கேட்க!
வெறும் கல்லாய் நிற்கும் உன்னிடம்..
கனவுகளை கல்லாக்கிவிட்டேன் மனதில்
அதனைக் கண் காணாத தெய்வமாய் வணங்கி..

No comments:
Post a Comment